search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான சேவை பாதிப்பு"

    ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. #AirIndiaStaff #AirIndiaStrike #MumbaiAirport
    மும்பை:

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் நேற்று இரவு திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 400 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ஒப்பந்த ஊழியர்களின் திடீர் போராட்டம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாங்காக் செல்லும் விமானம் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. நள்ளிரவு 1.30 மணிக்கு  புறப்படவேண்டிய மும்பை-மேவார்க் விமானம் அதிகாலை 4.08க்கு புறப்பட்டுச் சென்றது.



    விமான பயணிகள் பரிசோதனை, சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி மற்றும் விமானத்தை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட முக்கிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை சரிசெய்ய ஏர் இந்தியா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #AirIndiaStaff #AirIndiaStrike #MumbaiAirport
    சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடைந்ததால், ராய்ப்பூரில் விமான சேவை சிறிது பாதிக்கப்பட்டது.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதால் ராய்ப்பூர் விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, ராய்ப்பூர் விமான நிலையத்தில் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மின்னல் தாக்கியதில் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடந்தது.
    இதனால் விமானங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. கட்டுப்பாட்டு கருவியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து வருகிறோம். விரைவில் விமான சேவை தொடங்கும் என தெரிவித்தனர்.
    பாலியில் கடும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலை புகையை கக்கி வருவதால் வானில் சுமார் 2000 மீட்டர் சுற்றளவுக்கு புகை படர்ந்துள்ளது. நேற்று மட்டும் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. #BaliVolcano #AgungVolcanoActive
    தென்பசார்:

    இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஒரு ஆபத்தான ஆகங் எரிமலை தற்போது மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுற்றுலா நகரமான குடாவில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் இந்த எரிமலை உள்ளது. அதிவேகத்தில் புகையை கக்கி வரும் இந்த எரிமலை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது. 2ம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எரிமலையை சுற்றி உள்ள 4 கி.மீ. சுற்றளவுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வானில் சுமார் 2000 மீட்டர் உயரத்திற்கு எரிமலை சாம்பல் பரவி உள்ளது. இந்த புகை காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்மேற்கு திசையில் மக்கள் அதிகம் வசிக்கும் ஜாவா நோக்கி நகரும் என பிராந்திய எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் எச்சரித்துள்ளது.



    இந்த சாம்பல் புகை படர்ந்த பகுதிகளில் விமானங்கள் சென்றால் என்ஜின்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். விமான நிலைய ஓடுபாதைகளில் விமானங்கள் தரையிறங்கும்போது வழுக்கி விபத்தை ஏற்படுத்தும்.

    இதன் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாலியை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இதேபோல் பாலியின் சர்வதேச நுழைவு வாயிலும் நேற்று மாலை வரை மூடப்பட்டது. இதனால் சுமார் 75 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    விமானங்கள் ரத்து செய்யப்பட்டதும், சர்வதேச விமான நிலைய வான் எல்லையில் எரிமலை சாம்பல் படர்ந்திருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. சாம்பல் இல்லை என்பது உறுதி செய்த பிறகே விமான நிலையம் திறக்கப்பட்டு, கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பின்னர் விமானங்கள் இயக்கப்பட்டன.

    இதே ஆகங் எரிமலையானது இதற்கு முன்பு 1963ம் ஆண்டு வெடித்துச் சிதறியதில் சுமார் 1100 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #BaliVolcano #AgungVolcanoActive
    ×